மச்சி இன்னொரு குவார்ட்டர் சொல்லேன் ….

அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும் -3

முன்பகுதிகளைப் படிக்க:

அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும் -1 

அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும் -2

ஒரு தமிழ் எழுத்தாளரைப் பற்றி நான் படித்த ஒரு விமர்சனம்  நினைவுக்கு வருகிறது. அவர் குடிப்பழக்கம் உள்ளவர்.  “அவருடைய கொள்கை என்று எதுவும் நிரந்தரம் கிடையாது.  அவருக்குக் கடைசி கிளாஸ் மதுவை யார் வாங்கிக் கொடுக்கிறாரோ அவருடைய கொள்கைதான் இந்த எழுத்தாளரின் கொள்கையும் “  என்பதுதான் அந்த விமர்சனம்.

இந்தப் புத்தகத்தின் கருத்துக்களைப் படிக்கும்போதும்  அந்த விமர்சனம் எனக்கு நினைவிற்கு வருகிறது. புத்தகத்துக்கு யார் அணிந்துரையும் ஆசியும் தருகிறார்களோ அவர்களது கருத்துத்தான் தனது கருத்தும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் கண்ணதாசன்.

எழுத்தாளர்களை வளைப்பதில், மவுனம் அடையச் செய்வதில், அடிபணியச் செய்வதில் ‘காந்த’த்தையே துருப்பிடித்த இரும்பாக்கும் ஆற்றல் படைத்தவர்களிடம் சிக்கிக் கொண்ட கண்ணதாசனை நினைத்து பரிதாபப்பட மட்டுமே முடிகிறது.

‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்ற நல்ல தலைப்பை வைத்து எத்தனையோ மறைக்கப்பட்ட / புதைக்கப்பட்ட விஷயங்களைப் பற்றி அவர் எழுதி இருக்கலாம், அதை விட்டுவிட்டு, யாரிடமிருந்து மதத்துக்குச் சுதந்திரம் தேவைப்படுகிறதோ அவர்கள் காலிலேயே விழுந்து பேனாவுக்கு மை வாங்கி எழுதினால், இப்படித்தான் நடக்கும்.

‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்ற அர்த்தமில்லாத நூலுக்கு அவருடைய திரைப்படப் பாடல்கள் எவ்வளவோ மேல்.

வள்ளுவனோ, பாரதியோ, பாரதிதாசனோ போற்றப்படுவது அவர்களது சுதந்திரமான கருத்துக்களால்தான். எழுத்தாளனுக்குச் சுதந்திரம் முக்கியம். சுதந்திரம் இல்லாமல் எழுதுபவன் எழுத்தாளன் இல்லை, அவன் வெறும் எழுத்தன்.

[தொடரும்]

Tagged:

Leave a comment