முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகள்:
|
சென்ற பகுதியில் உழைப்பைப் பற்றி, ‘சப்தக் குழல்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் இன்னொரு கதை பற்றிச் சொல்லி இருந்தேன். |
‘மண்’ என்ற தலைப்பில் இருக்கும் ஏழாவது கதைதான் அது. |
ஒரு வயது முதிர்ந்த ஏழைக் குயவர். மண் சட்டி செய்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறார். பிளாஸ்டிக் வந்து பிழைப்பைக் கெடுத்தபின்னாலும் வேறு வழியில்லாமல், தொழிலைத் தொடர்ந்து செய்துகொண்டு வருகிறார். |
ஒரு நாள் , வண்டி நிறைய மண் சட்டிகளைப் போட்டுக்கொண்டு ஊர் ஊராகப் போய் ஒன்றும் விற்காமல் நொந்து கிடக்கிறார். அப்போது ஒரு திரைப்படப் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருக்கிறது. சினிமாக்காரன் ஒருவன் , இவரிடம் வந்து , சண்டைக்காட்சியில் உடைப்பதற்காக எல்லாப் பானைகளையும் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்கிறான். |
பெரியவர் முடியாது என்று சொல்லி விடுகிறார். கூட இருக்கும் பேரன் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. |
ஏன் என்று கேட்கிறான் சினிமாக்காரன். இப்போது வசனத்தைப் பாருங்கள். |
“நீங்க பானை சட்டிய உடைக்கறதுக்காகக் கேக்கறீங்க” என்கிறார் பெரியவர். |
“என்னைக்குனாலும் உடையப்போறதுதானே?” என்கிறான் சினிமாக் காரன். |
“மனுஷங்கூடச் சாகப் போறவன் தான், அதுக்காகக் கொல்லுவமா? “ – பெரியவர். |
“கொள்ளி வெக்கறதுக்கு நீங்க விக்கறது இல்லையா?” – சினிமாக் காரன். |
“யாரும் ஒரு வண்டிக் குடத்தை கொள்ளி ஒடைக்கறதில்லீங்க” என்று சொல்கிற பெரியவரை விநோத ஜந்து மாதிரிப் பார்த்துவிட்டுப் போகிறார்கள் சினிமாக்காரர்கள். |
கடைசியில் பானைகள் விற்காமல் , வண்டியைத் திருப்பிக்கொண்டு வெறும் பையோடு/ வயிறோடு வீட்டுக்குப் போகிறார் பெரியவர். |
பெரியவரைப் பொறுத்தவரைக்கும் பானை / குடம் என்பது ஒரு பொருள் அல்ல. அது அவருடைய வியர்வை – உழைப்பு. அதனை உபயோகத்துக்காக இல்லாமல் அழிக்கப்படுவதற்காக வாங்கப்படுகிறது என்று தெரியும்போது அவர் விற்கத் தயாராக இல்லை – வயிறு காலியாக இருக்கும்போது கூட. |
மற்றோர் சிறுகதைத் தொகுப்பிலிருந்து ஒரு கதையைப் பார்ப்போம். |
எல்லா ஆணுக்கு உள்ளேயும் ஒரு மிருகம் இருக்கிறது. நாம் இன்னும் ஆடை கட்டிய மிருகமாகத்தான் இருக்கிறோம். அந்த மிருகத்தின் ஆசைதான் பெண்களை நிர்வாணமாகப் பார்க்க வேண்டும் என்ற வெறி. |
இந்த மாதிரியான மனிதர்களின் மட்டமான மனதைப் பற்றி ஒரு கதை இருக்கிறது. |
“நிர்வாணம்” என்ற பெயரில் ஒரு சிறுகதைத் தொகுப்பு, உடுவை தில்லை நடராசா என்ற ஈழத்து எழுத்தாளர் எழுதியது. அதில் ஆறாவது கதை –“நிர்வாணம்” |
இரண்டு இளைஞர்கள் சினிமாப் பார்க்கப் போகலாம் என்று திட்டம் இடுகிறார்கள். தெருவில் வரும்போது அம்மணமான ஒரு சிறுமி பிச்சை கேட்கிறாள். |
“பெரிய கன்றாவியாக இருக்கு; அன்சகிக்கெபிள்” என்று அருவருப்பு அடைகிறார்கள் இளைஞர்கள். |
பிச்சை கேட்கும் சிறுமியைத் துரத்தி அடிக்கறார்கள். அவள் விடாமல் தொந்தரவு செய்யும்போது, அவளைப் பிடித்துக் கீழே தள்ளி விடுகிறார்கள். |
“உதுகள் உப்பிடித்தான், சில தாய் தகப்பன் தங்கடை விருப்பப்படி பெத்துத்தள்ளி விடுகிறது…” இப்படியாகப் பேசிக்கொண்டே வரும்போது ஒரு ஆபாச ஆங்கில சினிமா போஸ்டர் கண்ணில் படுகிறது. |
“எப்பிடி மச்சான், நல்ல படமா?” – ஒருவன் கேட்கிறான். |
“பைன் ஷோவா இருக்கும் மச்சான். லாஸ்ற் வீக் நான் ஒரு இங்கிலீஷ் படம் பார்த்தபோது சோர்ட்ஸ் போட்டுக் காட்டினவங்கள். ஹீரோயின் புல் நேக்கட்லை ஒரு டான்ஸ். ஃபைன் மச்சான் ஃபைன்.” |
“போன மாதமும் அவளின்ர படமொண்டு பார்த்தனான். அவளின்ர நேக்கட் டான்ஸ் பார்த்தாலே போதும், அதுக்கே காசு குடுக்கலாம்” |
என்கிறான் அடுத்தவன். |
“சரி மைச்சான்; றையுமாகுது. கெதியாக நட; இல்லாட்டி டிக்கட் எடுக்கேலாது” |
இரண்டு பேரும் அவசரமாகத் தியேட்டருக்கு ஓடுகிறார்கள், “ஆபாசம், அன்சகிக்கெபிள்” என்று கொஞ்ச நேரம் முன்னால் சொன்னதை மறந்துவிட்டு. |
புத்தக விவரம்: |
தலைப்பு |
நிர்வாணம் (சிறுகதைகள்) |
எழுதியவர் |
உடுவை. தில்லை நடராசா |
பதிப்பகம் |
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். |
உரிமை |
ஆசிரியர் |
முதல் பதிப்பு |
அக்டோபர்-1991 (இலங்கை),2-ஆம் அச்சு: பிப்-1994 |
ISBN |
81-234-0247-3 |
விலை |
20/- (இருபது) |
அணிந்துரை |
இல்லை |
கிடைக்கும் இடம் |
http://www.noolulagam.com/product/?pid=1721 |
|
தொடரும். |
–துடிமன்னன் |
Leave a comment