எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்….

அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும் -2

முன்பகுதி:  அர்த்தமுள்ள இந்து மதமும், அர்த்தமில்லாத ஆராய்ச்சியும் -1

தனது நூலின் 7-ஆம் பாகத்தில் [ ‘சுகமான சிந்தனைகள்’  – அத்தியாயம்-10, பக்கம் 78-80]  ஒரு ‘மா’மனிதரைப் பற்றி புகழோ புகழ் என்று புகழ்கிறார் கண்ணதாசன்.  ஆனால் உண்மையோ வேறுமாதிரி இருக்கிறது.

இனி அவர் சொல்லும் புகழுரைகள் – மிகவும் சுருக்கமாக. [ஆவலைத் தூண்டும் பொருட்டு, அடையாளம் காட்டக்கூடிய வரிகள் நீக்கப்பட்டுள்ளன. அடையாளம் கடைசிச் சுட்டியில் தரப்பட்டுள்ளது]

/*——–

ஆகவே, இந்தக் கட்டுரையின் தலை நாயகனாக   ——- ஐ நான் எடுத்துக் கொள்கிறேன்.

இயற்கையான சிவப்புக் கோடுகளின்றிச் செயற்கையாகச் சிவக்காத அழகிய பிரகாசமாக கண்கள்.

உள்ளத்தை ஊடுருவும் தீட்சண்யமான பார்வை.

ஜோதிப் பிழம்பு போன்ற முகம்.

கறை படாத மருவில்லாத மேனி.

ஒரு காவி ஆடையிலேயே அத்தனை அழகும் பொங்கிப் பொலியும் அற்புத வடிவம்.

கறந்த பால் கறந்தபடி வைக்கப் பெற்ற தூய்மையான உள்ளம்.

இளம் பருவத்திலேயே முதிர்ந்த விவேகம்.

பருவ கால நிலைகளை மிகச் சுலபமாக வென்று விட்ட மனோதிடம்.

கங்கை பிரவாகம் போல் பொங்கிப் பொலியும் கருத்துக் கோவைகள்.

கல்லிலும், முள்ளிலும் நடந்து பழகிய காலணி இல்லாத கால்கள்.

சந்தியா காலத்துப் புஷ்பங்களைப் போல், தான் மலர்ந்திருப்பது மற்றவர்களுக்காகவே என்னும் தியாக சீலம்.

வேம்பின் கசப்பும், சர்க்கரையின் இனிப்பும் நாக்குக்கு ஒன்றே போல் தோன்றும் பக்குவம். வள்ளுவன் கூறிய துறவறத்திற்கு ஒரு தெள்ளிய இலக்கணம்.

இந்து தர்மத்தை நிலை நாட்டிய இந்தப் பீடமே, இந்தியாவில் உள்ள மத பீடங்களில் எல்லாம் தூய்மையானது என்பதை நிரூபித்திருக்கிறது.

அரசியல் கலப்பற்ற சுத்தமான பீடம் அது என்பதாலே தான், அரசு பீடமே இறங்கி வந்து வணங்கியது.

இந்து தர்மத்தின் துறவிகள் மீது இழிமொழிகளும், பழிமொழிகளும் ஏராளமாக வந்து விழுந்திருக்கின்றன.

அவற்றிற்குக் காரணமானோர் சிலரும் இருந்தார்கள்; இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுத்து விடமுடியாது.

ஆனால், சனீஸ்வரனைப் பார்த்த கண்ணால் பரமேஸ்வரனைப் பார்க்கக் கூடாது.

`இரண்டும் ஈஸ்வரன் தானேஎன்று கேட்கக்கூடாது.

பக்தி மார்க்கத்தில் தம்மை மறந்த மெய் ஞானிகள் பலருண்டு.

அவர்களிலே வணங்கத்தக்க இருவரிலே ஒருவர் ————–.

பல்லாயிரம் ஆண்டுகளாக அழிவில்லாமல் இயங்கும் ஒரு தருமத்திற்கு அவ்வப்போது விளக்கேற்றி வைக்கும் ஞானச் சுடர்களில் ஒருவர் ——————–.

ஜாதியின் பெயரால் அவரைப் புறக்கணிக்க முடியாது. அவர் ஜாதிகளைக் கடந்தவர். நீதியின் பெயரால் அவரை நெருங்கினால், அவர் நிர்மலமான சித்திரை வானம்.

சுயதர்மத்தை மனிதனுக்குப் போதிப்பதற்காகத் தனக்கென்று ஒரு தர்மத்தை வகுத்துக் கொண்டவர்.

தான் முழுமையாக நம்பும் மதத்தின் மீது எந்தத் தாக்குதல்கள் வீசப்பட்டாலும், இறைவனைப் போல அவற்றைத் தாங்கிக்கொண்டு தனது தர்மங்களை ஒழுங்கு நியதிகளோடு செய்து வருபவர்.

இத்தகைய பக்குவம் பெற்ற, புடம் போட்டு எடுக்கப்பட்ட தங்கங்களால் தான், இந்துமதம் தலை நிமிர்ந்து நிற்கிறது. (அய்யோ.. அய்யோ…)

இந்தியாவில் எல்லா மதங்களுக்குமே சம அந்தஸ்து உண்டு என்றாலும், இந்தியாவின் அஸ்திவாரம் இந்து தர்மமே. அந்த அஸ்திவாரத்திற்குப் பலமும் தெளிவான வடிவமும் கொடுத்தவர்கள் ஆதிசங்கரரும், ராமானுஜரும்.

அந்தப் பாரம்பரியத்தில் ஒரு தெய்விக தீபம்————————-.

அவர் இந்து தர்மத்தின் ஜீவசக்தி. நடமாடும் தெய்வ வடிவம், வேத ஆகமங்களின் பிரதிபலிப்பு, காஞ்சி காமாட்சியின் இன்றைய தலைமகன்.

இந்த தர்ம பூமி மேலும் தழைத்தோங்க அந்த ஞான குருவே வழிகாட்டி.

————-

*/

படித்ததும் புல்லரிக்கிறதா?

சரி ‘இப்படி’ இருப்பதாகக் கண்ணதாசனால் வர்ணிக்கப்பட்ட அந்த மனிதர் ‘எப்படி’ ஆகி விட்டார்?

அதனைத் தெரிந்து கொள்ளக் கீழ்க்கண்ட சுட்டிகள் உங்களுக்கு உதவக்கூடும்.

http://suunapaana.blogspot.in/2009/08/blog-post.html

http://tamil.oneindia.in/news/2004/11/30/anuradha.html

கூகிளில் தேடினால் உங்களுக்கு ‘எல்லா’ விவரமும் கிடைக்கும்.

[தொடரும்]

Tagged: ,

Leave a comment