முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகள்: | |||||||||||||||||||||||||||||||||||||||
/–எழுத்தாளன் என்றைக்குமே சமூகத்தை விட, குறைந்தது ஒரு தலைமுறையாவது தாண்டி முன்னோக்கி யோசிக்க வேண்டும். அப்போதுதான் அவனுடைய நல்ல கருத்துக்கள் உந்து சக்தியாக மாறி சமூகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும். ஆனால் எழுதுபவனோ அல்லது மற்ற படைப்பாளியோ , எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள்? –/ | |||||||||||||||||||||||||||||||||||||||
இவை சென்ற பதிவில் நாம் எழுதிய வரிகள். இந்தப் பதிவை இந்தக் கருத்தில் இருந்து ஆரம்பிப்போம். | |||||||||||||||||||||||||||||||||||||||
இன்றைய தேதிக்கு, இந்திய மொழிகளிலேயே அதிகமாக புத்தகங்கள் வெளியாவது தமிழில்தான் என்று நினைக்கிறேன். என்னிடம் புள்ளி விவரம் கிடையாது. இருந்தாலும் என் உள்ளுணர்வு சொல்கிறது. | |||||||||||||||||||||||||||||||||||||||
இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், நம் எழுத்தறிவு தான். வெள்ளைக்காரர்கள் தங்கள் பண்பாடு, கல்விமுறை மூலமாக அதிகமாக பாதித்த மாநிலங்கள் வங்காளம், தமிழ்நாடு இரண்டுதான். கேரளா, தமிழ்நாட்டில் இருந்து பிரிந்ததனால் அதைத் தனியாக சேர்த்துக் கொண்டால் வங்காளம், தமிழ்நாடு, கேரளா இந்த மூன்று மாநிலங்களையும் சொல்லலாம். | |||||||||||||||||||||||||||||||||||||||
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த காலத்தில் நிர்வாகத்தை நடத்திக்கொண்டு இருந்த முக்கால்வாசி சிவில் சர்வீஸ் அதிகாரிகள் இந்த மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான். (இப்போது எல்லாம் மாறிவிட்டது) | |||||||||||||||||||||||||||||||||||||||
இலக்கியம், சினிமா, இதழியல் போன்ற துறைகளில் வேகமாக முன்னேறியதும் இந்த மூன்று மொழிகள்தான். ஆனால், விருது அடிப்படையில பார்த்தால் வங்காளி, மலையாளம் அளவுக்கு தமிழின் தரம் பிரதிபலிக்கவில்லை. | |||||||||||||||||||||||||||||||||||||||
ஞானபீட விருது பட்டியல் : மொழிவாரியாக (2012 வரை)
|
|||||||||||||||||||||||||||||||||||||||
வெளிப்படையாக சொன்னால் தமிழ் மொழி இருக்கும் இடமே தெரியவில்லை. | |||||||||||||||||||||||||||||||||||||||
மேலோட்டமாகப் பார்த்தால் தமிழில் எழுதப்படும் படைப்புகளின் தரம் சரியில்லை அல்லது நமது எழுத்துக்கள் வெளியே ரெஃப்லெக்ட் ஆகவில்லை, ஆகிய இந்த இரண்டும் காரணமாக இருக்க முடியும் என்று நீங்கள் சொல்லலாம். இது மட்டும் இல்லாமல் மொழிகளுக்கு இடையிலான அரசியல் என்றும் சொல்லலாம். அதிலும் உண்மை இருக்கிறது, இல்லை என்று சொல்லவில்லை. | |||||||||||||||||||||||||||||||||||||||
நன்றாக யோசித்துப் பார்த்தால், அரசியல் எங்குதான் இல்லை? தேவகவுடா பிரதமராக இருந்தபோது, இந்தியக் கிரிக்கெட் அணியில் 6 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். (டைட்டன் கப்-1996 : ஜவஹல் ஶ்ரீநாத், அனில் கும்ப்ளே, சுனில் ஜோஷி, ராகுல் திராவிட், வெங்கடேஷ் பிரசாத், சுஜித் சோமசுந்தர்). ஆனால் அதனால் சச்சின் டெண்டுல்கர் வெளியில் தள்ளப்படவில்லையே? | |||||||||||||||||||||||||||||||||||||||
தமிழ் இலக்கியம் இப்படி நாறிப் போகக் காரணம் வேறு. மிக மிக முக்கியமான காரணம் உள்ளடி (சாதி) அரசியல்தான். | |||||||||||||||||||||||||||||||||||||||
இராமாயணத்தைத் தழுவல் செய்து இராஜாஜி ‘சக்கரவர்த்தித் திருமகன்’ எழுதினார். உடனே சாகித்ய அகாடமி (1958) பரிசு கிடைத்தது. | |||||||||||||||||||||||||||||||||||||||
சு.சமுத்திரம் மாய்ந்து மாய்ந்து 300க்கும் மேல சிறுகதைகள், 10-15 நாவல் எல்லாம் எழுதி, 1990-ல சாகித்ய அகாடமி பரிசு (‘வேரில் பழுத்த பலா’ -நாவல்) வாங்கியபோது சிலர், ‘குய்யோ முறையோ’ என்று எல்லோரும் கூப்பாடு போட்டார்கள். ‘சாகித்ய அகாடமியிலயும் இட ஒதுக்கீடு நுழைந்து விட்டது ‘ என்று எழுதி, புழுத்து, நாறிப் போன தங்கள் மனப்பிறழ்வைக் காட்டினார்கள். | |||||||||||||||||||||||||||||||||||||||
இராஜாஜி தழுவல் செய்து எழுதினால் அது திறமை. சமுத்திரம் உழைத்து முன்னுக்கு வந்தால் அது இட ஒதுக்கீடு. இந்த மனப்போக்கு இருந்தால், நம்மை யார் சீந்துவார்கள்? | |||||||||||||||||||||||||||||||||||||||
தமிழ்நாட்டில் எழுத்தாளன் எனப்படுபவன் ஒரு ஈ(ன)ப் பிறவி. அதுவும் எழுத்தையே முழு நேரமாகச் செய்பவர்கள் எல்லாம் பிழைக்கத் தெரியாத பைத்தியக்காரர்கள். கேரளாவில் ஒரு எழுத்தாளர் செத்துப் போனால், எல்லா நாளிதழ்களிலும் (ஆங்கில நாளிதழ்கள் உள்பட) முதல் பக்கத்தில் படத்துடன் செய்தி வரும். தமிழ்நாட்டில் ? | |||||||||||||||||||||||||||||||||||||||
[தொடரும்] |
–துடிமன்னன்
Tagged: இராஜாஜி, சக்கரவர்த்தித் திருமகன், சாகித்ய அகாடமி, சு.சமுத்திரம், ஞானபீட விருது, வேரில் பழுத்த பலா
[…] நூல்கள் நுகர்வோம்-5 […]
[…] நூல்கள் நுகர்வோம்-5 […]