Sunday, September 09, 2012
2004-2012
இந்தப் பதிவில் நான் இடுகை (கேள்வி கேட்டு) இட்டுப் பல வருடங்களாகி விட்டன. இடையில் பல நிகழ்வுகள் குழந்தைப் பிறப்பு / இட மாற்றம் போன்ற வெளி மாற்றங்களும் சில மன மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. தீவிரமாகப் பிடித்து வைத்திருந்த பல கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இடையில் திடீரென ஜோதிடத்தில் ஆர்வம் ஏற்பட்டு ஜோதிடமும் கற்க ஆரம்பித்தேன். கொஞ்சம் ஆன்மிகம் குறித்தும் ஆராய ஆரம்பித்தேன். பல விஷயங்கள் புரிய ஆரம்பித்தன. புரிந்து வைத்திருந்த பல விஷயங்கள் திரும்பக் குழம்பி விட்டன !! எனவே குழப்பம் தீர வேண்டித் திரும்ப எழுதுவோம் என முடிவெடுத்து விட்டேன்.