திருவெம்பாவை பாடல் – 16

திருவெம்பாவை பாடல் -16

 

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்

என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்

மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்

பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்

தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

முன்னி அவணமக்கு முன்சுரக்கும் இன்னருளே

என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.  ——– [ 16 /20 ]

இப்பாடலின் விளக்கத்தைப் படிக்க ஓடைக்கு   வாருங்கள்.

Leave a comment