திருவெம்பாவை பாடல் – 14

திருவெம்பாவை பாடல் -14

 

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்

கோதை குழலாட வண்டின் குழாமாடச்

சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி

வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்

சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி

ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்

பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.    ———[ 14 / 20 ]

இப்பாடலின் விளக்கத்தைப் படிக்க ஓடைக்கு   வாருங்கள்.

Leave a comment