வரலாற்றைப் புதைக்கும் வருங்காலங்கள்

/***

இன்றைக்கு நீ உட்கார்ந்து1950-ல் வெளிவந்த திரைப்படம் பார்த்தால் எப்படிப் பல காட்சிகள் பைத்தியக்காரத்தனமாக தோன்றுமோ அது போலவே சில வரலாற்று நிகழ்வுகளும் இருக்கும்.வரலாற்றை உண்மையான நோக்கத்தில் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நாம் நம் மனநிலையில் பின்னோக்கிப் பயணம் செய்து அந்தக் காலகட்டத்தில் இருந்த சூழ்நிலையை ஆராய்ந்து வரலாற்று நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

**/

இந்தக் கருத்தானது ‘பேரறிஞர் சொன்ன பெருச்சாளிகள் கதை’ என்ற முந்தைய பதிவில் நான் கூறிய கருத்தாகும்.  50 / 100 வருடங்களுக்கு முன்னால் இருந்த சூழ்நிலையைக் கணக்கில் கொள்ளாமல், இன்று 2012-ல் நமக்கு இருக்கும் மன நிலையை  அளவு கோளாகக் கொண்டு பழைய வரலாற்று நிகழ்வுகளை  அளக்கப் போனால் பெரிய தவறு ஏற்படும்.

ரஷ்ய நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட ‘லெனின்’ , இப்போது ஒரு ‘கொலைகாரன்’ என்று சித்தரிக்கப்பட்டு, மக்கள் அவருடைய சிலை மீது காறித் துப்புவதும் , செருப்பை எறிவதும் நடக்கிறது.  இன்றைய கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் பிரச்சினைகளுக்கு 100 வருடங்களுக்கு முன்னால், விடுதலைக்காகப் போராடி, ஜார் மன்னர்களிடம் இருந்து விடுதலை பெற்றுத் தந்த லெனின் எப்படிப் பொறுப்பாக முடியும்?

பார்க்க :  மங்கோலியாவில், லெனின் சிலை மீது ஷூக்களை எறியும் மக்கள்.

(பட உதவி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், செவ்வாய் – 16-அக்டோபர்-2012, பக்கம்-11)

மன்மோகன் சிங்கும் மான்டேக் சிங்கும் பொருளாதாரத்தை மாற்றுகிறேன் பேர்வழி என்று  அமெரிக்காவிடம் நாட்டை அடகு வைத்து, இந்தியாவை நாசம் செய்வதற்கு  மகாத்மா காந்தியோ நேருவோ  எப்படிக் காரணம் ஆக முடியும்?

அப்படியானால், நாடு நன்றாகப் போனால், பழைய தலைவர்களுக்கு விழா எடுப்பதும், நாசமாகப் போனால் அவர்களைச் செருப்பால் அடிப்பதும்  நாம் உண்மையான விழிப்புணர்வுடன் வாழவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

இன்றைய தி.மு.க-வின் செயற்பாடுகளை வைத்து அன்றைய அண்ணாவை விமர்சனம் செய்து தமிழ்-இந்துவில் கட்டுரை எழுதியவரும், அதற்குத் துதிபாடி (‘நீங்கதான் என் கண்ணத் தொறந்தீங்க’  என்று கூட ஒருவர் பின்னூட்டமிருக்கிறார்.) எழுதிய மக்களும் சிந்திக்க வேண்டும் என்பதற்குத்தான் இந்தப் பதிவு.

Tagged: , , ,

Leave a comment