கேள்விகள் 4-6

2004-ல் நான் பி-லாக்கரில் இட்ட பதிவுகளை இங்கு தொகுத்துத் தருகிறேன்.

Monday, April 19, 2004

கேள்வி-4

 
தமிழக அரசு ஊழியர்கள் யாரும் அரசின் அனுமதி இல்லாமல் (அரசுக்கு தனது படைப்புகளை அனுப்பி சரிபார்த்தபின்பே வெளியிட வேண்டும், படத்தை censor-க்கு அனுப்புவது போல) இதழ்களில்/செய்தித்தாள்களில் எழுதக்கூடாது என்ற அரசாணையை ஏன் தமிழ்நாட்டில் (செய்தித்தாள்கள் உள்பட) யாரும் எதிர்க்கவில்லை? எழுத்துரிமை மீதான இந்தக் கத்தியை முன்பு இந்திரா காந்தி கொண்டு வந்த போது எதிர்த்த கலைஞர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் இன்று அமைதி காப்பது ஏன்? எழுத்தாளர்களும் ஏன் எதிர்க்கவில்லை?
 

Saturday, April 24, 2004

கேள்வி-5

 
ஈழம் பற்றி இங்குமங்கும் இணையத்தில் சிதறிக்கிடக்கும் செய்திகள் பல. 1948 லிருந்து ஈழத்தின்/ஈழப் போராட்டத்தின் வரலாற்றை முறையாக,முழுமையாகத் தொகுத்து வைத்திருக்கும் இணையத்தளம் ஏதேனும் இருக்கிறதா? (நூல்கள் இருந்தாலும் கிடைக்கும் முகவரி அளியுங்கள்)

 

Monday, April 26, 2004

கேள்வி-6

 
NDTV-யில் நேற்று ஒரு நல்ல நிகழ்ச்சி வந்தது. நடுத்தர வர்க்கம்/இளைஞர்கள் அரசியல்/தேர்தலில் இருந்து விலகிப் போகிறார்களா என்ற தலைப்பில். தெற்கு மும்பையில் போட்டியிடும் ஒரு 27 வயது நிரம்பிய பாஸ்டன் பல்கலைக்கழகத்திலிருந் து படித்துத் திரும்பிய வேட்பாளர், புனேயில் சுயேச்சையாக நிற்கும் ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி, ஒரு பத்திரிக்கையாளர் என மூவரைச் சரமாரியாகக் கேள்வி கேட்டார் ராஜ்தீப். பார்வையாளர்களாக இருந்தவர்களில் நிறையப் பேர் கல்லூரி மாணவர்/மாணவியர்கள். இந்த மாதிரி உருப்படியான நிகழ்ச்சிகள் படித்தவர்கள் /அறிவாளிகள்/சிந்தனையாளர்கள் அதிகம் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழ்நாட்டில் இருக்கும் தொலைக்காட்சிகளில் ஏன் வருவதில்லை?

Leave a comment